தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 16, 2010

குட்டிக் கவுஜகள்!

புயல் அறிவிப்பால்
கடலுக்குப் போகவில்லை..
தண்ணீர்-
கடலில் மட்டுமல்ல
கஞ்சிக் கலயத்திலும்தான்.

-*-*-*-*-*-*-*-*-*-*-
நாய் விற்ற காசு குலைக்காது
ஆனால்
அக்காசில் வாங்கிய செருப்பு
கடித்தது!

-*-*-*-*-*-*-*-*-*-*-

6 கருத்துகள்:

  1. புதிய முயற்சி புதுமையாக, கருத்துக்கள் பொதிந்தவையாக உள்ளன . படித்தேன் ரசித்தேன் ருசித்தேன் . வாசு

    பதிலளிநீக்கு
  2. //நாய் விற்ற காசு குலைக்காது
    ஆனால்
    அக்காசில் வாங்கிய செருப்பு
    கடித்தது!//

    நிதர்சனமான உண்மை.

    குட்டிக்கவிதைகள்(கவுஜகள் ) அற்புதம்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. நடனசபாபதி அவர்களே,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  5. நாய் விற்ற காசு குலைக்காது நல்ல கவிதை. ஆனால், குலைக்காது என்பது பேச்சுவழக்கு. குரைக்காது என்றுதான் இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  6. @"it is tha most unkindest cut of all" என்று சுவைக்காக செகப்பிரியர் எழுதலாம்.”மழைந்தது” என்ற புதிய சொல்லை கம்பன் உபயோகிக்கலாம். இதெல்லாம் கவிஞனின் உரிமை.அது போலத்தான் இதுவும்.பேச்சு வழக்கையே பயன் படுத்தி விட்டேன்(சமாளி,சமாளி!!)
    தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு