தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 27, 2011

பொன்மொழிகள்-25

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.












57 கருத்துகள்:

  1. நல்ல பொன்மொழிகள்.....

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பொன்மொழிகள் அனைத்தும் அருமை நண்பரே! அனைத்தும் திரும்ப திரும்ப படித்து யோசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. 1, 5, 6, 8, 12 - 15, 22, 25...

    அனைத்தையும் மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே "பொன்"மொழிகள்தான்!
    நல்ல பகிர்வு.

    புது டெம்ப்ளேட் நல்லாருக்கு.
    ஐயா!ஒரு சின்ன வேண்டு கொள் இந்த பதிவுல font size கொஞ்சம் சின்னதா இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. எழுத்துக்கள் இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்தால் படிக்க சிரமம் இருக்காது.. சிறியதாகவும் போட்டு விட்டு bold வேறு செய்திருக்கிறீர்கள் கடினமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  6. அருமையான அவசியம் அனைவரும் மனதில்
    எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய
    அற்புத பொன் மொழிகள்
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    த.ம 4

    பதிலளிநீக்கு
  7. எல்லா பொன் மொழிகளுமே நன் மொழிகள். கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இன்னாபா இதூ
    அர்வுரெ சொன்னாக்கா பாரு எவ்னும் கருத்து சொல்ல கூட வர்மாட்டங்க்றாங்க
    அதுக்காக நீ வர்தப்படாதே வாத்யாரே
    ஒலகம் அப்படிதான்.
    நல்லதையே நெனச்க்கோ
    நல்தே நட்கும்.
    (அனைத்தும் தங்கத்தால் பொரிக்கவேண்டியவைகள். அருமை...அருமை)

    பதிலளிநீக்கு
  9. அருமையான பொன்மொழிகள். எழுத்துக்களின் அளவைப் பெரிதாக்கிக் கொடுத்தால், படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. "பொன்"மொழிகள் பகிர்வு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. அழகிய பொன்மொழிகள் ,அருமை ஐயா

    த.ம 8

    பதிலளிநீக்கு
  12. தத்துவ மழையும், தமிழ்நாட்டு மழையும் ஒரே நேரத்தில்.

    பதிலளிநீக்கு
  13. எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். -க்ளாஸ்! எல்லாப் பொன்மொழிகளுமே அருமை.

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான பொன்மொழிகள்!

    பகிர்விற்கு நன்றி.

    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. @! சிவகுமார் !

    மழை நல்லதுதானே!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @சத்ரியன்
    நன்றி.உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.//

    சத்தியமான வார்த்தை...!!!

    பதிலளிநீக்கு
  18. தல, எல்லா பொன்மொழியும் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்...!!!!

    பதிலளிநீக்கு
  19. சென்னை பித்தன் அவர்களுக்கு வணக்கம்!
    பதிவுலகில் எவ்வாறு இணைவது என்று நான் கூகிளில் தேடியபோது தங்களது ”ஒரு பதிவர் மனம்திறக்கிறார் “என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் தாங்கள்குறிப்பிட்ட’’பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.. .. ..எழுதுவது ஒன்றே நோக்கமாக இருந்தது’’ என்ற வரிகள் என்னை மேலும் எழுதத் தூண்டியது.முன்பே
    சொல்லியிருக்க வேண்டியது.இன்றுதான் எனக்கு நேரம் கிடைத்தது.தங்கள் வருகைக்கு நன்றி (எனது வலைப் பதிவில் தங்களுக்கு நான் இட்ட மறுமொழி)

    பதிலளிநீக்கு
  20. @தி.தமிழ் இளங்கோ
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அருமையான பொன்மொழிகள் மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ......

    பதிலளிநீக்கு
  22. நடைமுறைகேற்ற
    நிதர்சனமான பொன்மொழிகள்.

    பதிலளிநீக்கு
  23. பல தடவை படிக்க வேண்டிய வரிகள் அருமை. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  24. 25 பொன் மொழிகளும் ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக உள்ளன . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  25. நல்லதோர் பகிர்வு ஐயா,
    சீரிய வழியில் சென்று, வாழ்வில் நல்ல வழியில் சென்றிட உதவும் பொன் மொழிகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  26. அனைத்துமே அருமை. சிலதைக் குறித்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  27. அருமையானதும் உண்மையானதும் கூட நன்றி ஐயா........

    பதிலளிநீக்கு