தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 31, 2014

காதலுக்கு எல்லையில்லை!



சாவித்ரி!ரொம்பப் பசிக்கறதுடி.இன்னிக்கு எங்கேயாவது வெளில போய்ச் சாப்பிட்டுட்டு வரலாம்.ஏன்ன” பத்மனாபன் மனைவியிடம் கேட்டார்.

அவரே தொடர்ந்தார்” நேரு பஜார்ல புதுசாத் தெறந்திருக்கானே ஒரு சைனீஸ் ஓட்டல்.ரொம்ப நன்னாருக்காம்.நீயும் சைனீஸ் சாப்பிட்டதே இல்லையே?இன்னைக்கு ஒரு சேஞ்சுக்கு அங்க போய்ச் சாப்பிடலாம் என்ன சொல்ற?”